Posts

ஸெளந்தர்யலஹரி 71-74

Image
 71) அழகின் ஆனந்த அலைகள்  #ஸெளந்தர்யலஹரி-71 _____________________________ நகாநாம் உத்யோதை: நவநளிந ராகம் விஹஸதாம் கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம் யதி க்ரீடல்லக்ஷ்மீ சரணதல லாக்ஷராஸ சணம் !! தாயே உமா!, புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் பூவினைப் ஏளனம் செய்யும் விதமான, அழகிய பிரகாசம் உள்ள உனது கை நகங்களை நாங்கள் எவ்வாறு வர்ணிக்க இயலும்?. மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம் ஒருவேளை உனது நகங்களின் காந்திக்கு சற்றே ஒப்பாக இருக்கலாம். அன்னையின் கை நகங்களது ஒளிக்கு சமமாக எதையும் சொல்ல இயலவில்லை, அது அவ்வளவு ஒளி பொருந்தியதாக, அழகாக இருக்கிறது என்கிறார் சங்கரர். புதிதாய் மலர்ந்த தாமரையின் அழகை போன்றது அன்னையின் நகங்கள் என்றால் அதுசரியல்ல. அன்னை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் இருக்கும் செம்மையான நலுங்கு அலங்காரம், அவள் அமர்ந்த தாமரைப் பூவுடன் சேர்கையில் கிடைக்கும் நிறமானதும் உனது நகங்களது ஒளிர்மைக்கு நிகரானது இல்லை, ஆனால் அது நகங்களின் உனது காந்திக்கு சற்றே அருகில் இரு...

ஸெளந்தர்யலஹரி 51-----60

Image
  அழகின் ஆனந்த அலைகள்  #ஸெளந்தர்யலஹரி-51 ____________________________________ சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா இந்த ஸ்லோகத்தின் நவரசங்களும் அம்பிகையின் கண்களில் தெரிவதாகச் சொல்லியிருக்கிறார்.  எப்போது எந்த ரசம் தெரியும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார்.  பரமசிவனிடத்தில் சிருங்கார ரஸமும், மற்றவரிடத்தே பீபத்ஸ ரஸம் (வெறுப்பு), கங்கையிடத்து ரெளத்ரமும், ஈசனின் லீலைகளால் அத்புத ரஸமும், அவரது சர்பங்களால் பயமும், தாமரை போன்ற சிவந்த கண்கள் வீரத்தையும், தோழிகளிடத்து ஹாஸ்யமும், பக்தர்களிடத்து கருணையும் தெரிகிறதாம்.  அன்னை சாந்தமாக இருக்கையில் கண்களில் மாறுபாடு தெரிவதில்லை என்பதால் நவரசஸங்களில் அது பற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. லலிதா சஹஸ்ரநாமாக்கள்: ச்ருங்கார  ரஸ  ஸம்பூர்ணா அவ்யாஜ  கருணாமூர்த்தி தரஸ்மேர     முகாம்புஜா வந்தாரு  ஜந  வத்ஸலா ரமணலம்படா ஸாந்த்ரகருணா என்றெல்லாம் சொல்வதை காணலாம்.  #...

ஸெளந்தர்யலஹரி 42--50

Image
 அழகின் ஆனந்த அலைகள் ஸெளந்தர்யலஹரி   42 ____________________________________ .கிரீட வர்ணனை கதைர் மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர கடிதம் கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: ஸ நீடேயச்சாயா ச்சுரண ஶபலம் சந்த்ர ஶகலம் தனு: ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம்  !! இமயமலையின் பெண்ணே ! மாணிக்கங்களாக உன் சேவையின் பொருட்டு உருவடைந்துள்ள பன்னிரண்டு ஆதித்தியர்களால் நெருக்கமாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எவன் வர்ணிக்கப் புகுகிறானோ அவன் கிரீடகோளத்தில் உள்ள மாணிக்கங்களின் காந்தியால் விசித்திரவர்ணம் உள்ளதாகத் தோன்றும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்ற கருத்தை வர்ணனையில் எப்படிப் புருத்தாமல் இருக்க முடியும் ? பன்னிரெண்டு ஆதித்யர்கள் :- 1) அம்சமான் ,2)தாதா 3) சவிதா 4) அரியமான் 5)விஸ்வான் 6)பகன் 7)பர்ஜன்  8) துவஷ்டா     9)   மித்திரன் 10)விஷ்ணு ,11)    வருணன் 12 பூஷா   கைலாஸத்தில் ஆசார்யாளுக்கு ஈச்வரன் தந்த பஞ்ச லிங்கங்களுக்கு சந்திரமௌளீச்வரர் என்றே பெயர். ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்க...

ஸெளந்தர்யலஹரி 31 --41

Image
  #ஆனந்த அலை-31 64 தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்:- சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம்  ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: I  புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா  ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம் ii  பரமசிவன் அவரவர் நாடும் அந்தச் சித்தியைமட்டும் அளிக்கும் வேறு தந்திரங்களாகிய அறுபத்துநான்கு வகைப்பட்ட தந்திர சாஸ்திரங்களால் எல்லா உலகத்தையும் நிரப்பிவிட்டு சும்மா இருக்க, மேலும் உன்னுடைய கட்டாயத்தின் பேரில் எல்லா விருப்பங்களையும் , அறம் ,பொருள், இன்பம்,வீடு என்னும் எல்லா புருஷார்த்தங்களையும் ஒருங்கே கூட்டிவைக்க வல்லதான உன்னுடைய தந்திரமாகிய இந்த ஶீ வித்தையை பூவுலகில் அவதரிக்க செய்தார். ஶீ வித்தை இரண்டு வகைப்படும். அவை ஸமயாசாரம்  , வாமாசாரம் அல்லது கெளலமார்க்கம். 1)ஸமயாசாரம் :-  வசிஷ்டர், ஸநகர், சுகர், ஸநந்தனர் , ஸநத்குமாரர் ஆகிய ஐவரும் அருளிய "சுபாகம பஞ்சகம்" என்று பெயர் பெற்ற ஸம்ஹிதைகளில் போதிக்கப்பட்ட மார்க்கம். இதுவே வைதீகர்களால் அனுஷ்டிக்க தக்கது . இது எல்லா புருஷார்த்தங்களரயும்  சாதிக்க வல்லது.  2) வா...

ஸெளந்தர்யலஹரி 27 -30

Image
#ஆனந்த அலை-27 ஸமயாசார மானஸிக பூஜை:- ஜபோ ஜல்ப:சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா  கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனத்யாஹுதி-விதி: I  ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா  சபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் ii  ஆத்ம ஸமர்ப்பண பாவனையால், வெறும் பேச்சு ஜபமாகவும், கைத்தொழில் அனைத்தும் முத்திரைகளின்  விளக்கமாகவும்,  நடை ப்ரதக்ஷிணம் செய்வதாயும், உண்டி முதலியன ஹேமமாகவும் , படுத்துக்கொள்ளுதல் நமஸ்காரமாகவும், இன்னும் சுகமான முயற்சியின்றி எனது செயல் எது உண்டோ அது எல்லாம் உன்னுடைய பூஜை முறையாகவும், ஆகட்டும் முத்திரைகள்-  "தச முத்ரா  ஸமாராத்யா" என்ற லலிதா ஸஹஸ்ரநாமாவளிக்கு ஏற்ப ஶீ வித்தையில்  பத்து முத்திரைகள் அம்பாள் ஆராதனையில்  முக்யமானவை. அவை  ஸர்வ ஸம்க்ஷோபிணீ ஸர்வ வித்ராவிணி, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வ வசங்கரீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வமஹாங்குசா, ஸர்ச கேசரீ, ஸர்வ பீஜே,  ஸர்வ யோனி, ஸர்வத்ரிகண்டா.  கை விரல்களின் இயக்கம் எப்படியிருந்தாலும் அவை எல்லாம் ஞானிகள் விஷயத்தில்  முத்திரைகள் காட்டியதாகவே ஆகின்றன. ஸமயாசாரத்தைக்கொண்ட ஞானிகள் வெளிப்படையாக ஶீ ...